ஒடிசாவில் கோபர்தன் ரவுட்(65) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினபந்து ரௌத்(40) என்ற மகனும், பூஜா ரௌத்(32) என்ற மருமகளும் இருந்துள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது இதனால் கோபத்தில் கோபர்தன் ரௌத் தனது மகன் மற்றும் மருமகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூஜா உயிரிழந்தார். தினபந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.