சுஷாந்த் மேத்தா என்பவர் மகேந்திரா நிறுவனத்தின் கார்கள் வடிவமைப்பு மற்றும் அந்த நிறுவனத்தில் ஊழியர்களை விமர்சித்து பதிவிட்டிருந்தார். அவர் கூறியதாவது மஹிந்திரா, நிறுவனத்தில் ஏற்கனவே உள்ள கார்கள், சர்வீஸ் சென்டர், உதிரி பாகங்கள் பிரச்சினைகள், பணியாளர்களின் நடத்தைகள் போன்றவற்றில் இருக்கும் பிரச்சனைகளை முதலில் சரி செய்யுங்கள். உங்கள் கார்களின் தோற்றம் ஹூண்டாய் அழகின் அருகில் கூட வரவில்லை. உங்களது டிசைனிங் அல்லது உங்களுக்கு இவ்வளவு மோசமான ரசனை உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை.

மஹிந்திராவும் டாடாவும் உலகிற்கு புதிய மாருதி மற்றும் ஹூண்டாய் ஆக முடியும் என நான் நம்புகிறேன். ஆனால் இதுவரை ஏமாற்றம்தான் என பதிவிட்டார். அதற்கு பதில் அளித்த ஆனந்த் மகேந்திரா சரியாக சொன்னீர்கள் சுஷாந்த் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் தான். ஆனால் நாங்கள் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். 1991இல் இந்த நிறுவனத்தில் சேர்ந்தேன். ஒரு உலகளாவிய ஆலோசனை நிறுவனம் கார் வணிகத்தை விட்டு வெளியேறுமாறு எங்களுக்கு அறிவுரை வழங்கியது.

ஏனெனில் வெளிநாட்டு பிராண்டுகளுடன் போட்டியிட எங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று அவர்கள் கருதினார்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகும் நாங்கள் இன்னும் கடுமையாக போட்டியிடுகிறோம். வெற்றி பெறுவதற்கான எங்கள் பசியை தூண்டுவதற்கு உங்கள் பதிவை போலவே எங்களை சுற்றியுள்ள இழிவான தன்மை, சந்தேகம், முரட்டு தன்மையை பயன்படுத்தி உள்ளோம். நாங்கள் என்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். அதற்குள் எந்த மனநிறைவும் எங்களிடம் இல்லை. தொடர்ச்சியான முன்னேற்றம் தொடரும். எங்கள் வயிற்றில் நெருப்பை ஊட்டியதற்கு நன்றி என பதில் அளித்துள்ளார்.