கடலூர் மாவட்டத்தில் உள்ள ஓலையூர் கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மனோஜ் குமார். இந்த நிலையில் மனோஜ் குமார் தனது நண்பர்களான ஆனந்தராஜ், சுபாஷ் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் விருதாச்சலம் நோக்கி சென்றுள்ளார். இந்த நிலையில் வேட்டக்குடி அருகே சென்றபோது மழையினால் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த வடிகால் வாய்க்கால் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மனோஜ் குமாரும் ஆனந்த ராஜும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுபாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று உயிரிழந்த வாலிபர்களின் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.