தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் வருகிற 18-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இன்று தமிழ்நாட்டில் கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு திருநெல்வேலி மாவட்டத்திற்கு அதிதீவிர கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.