இனிமேல் தொடர் உண்ணாவிரதம் தான்…. போராட்ட வடிவை மாற்றிய விவசாயிகள்….!!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தொடர்  உண்ணாவிரதம், மறியல், சுங்கச்சாவடி முற்றுகை என மேலும் மேலும் தீவிரமடைந்து வருகிறது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் நடைபெற்று வரும் லட்சக்கணக்கான விவசாயிகளின் போராட்டம் 26 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. மூன்று வேளாண் சட்டங்களையும்  திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

இன்று முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அவர்கள் மறியல், சுங்க சாவடி முற்றுகை என போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.  ஒவ்வொரு நாளும் 11 விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேறுப்பார்கள் என்றும்  24 மணி நேரமும் போராட்டம் நீடிக்கும் என்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் சங்க செயலாளர் திரு.வல்வன் தெரிவித்துள்ளார்.