சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் மேற்கு பகுதியில் ஸ்பா மற்றும் மசாஜ் மையத்தில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இதனால் மசாஜ் மையத்தின் உரிமையாளரான விக்னேஷின் மனைவி பிரேமா என்பவரை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்களை போலீசார் மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் தங்க வைத்தனர்.