புதிய வகை வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் அண்மைக்காலமாக H3N2 என்ற புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. காய்ச்சல், இருமலை உருவாக்கும் இந்த வைரசால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் புதிய வகை வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மருந்து பற்றி முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.