சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏழு பேர் உயிரிழந்தது மிக துயரமான சம்பவம் பல மணி நேரத்திற்கு பிறகு தான் அதை சென்று பார்க்கும் நிலை ஏற்பட்டது. அதைவிட மிக கொடூரமான விஷயமாகத்தான் இருக்கிறது. இங்கு புவி வெப்பமயமாதல் என்றால் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. பருவமழை என்பது இனிமேல் இருக்காது. மழை, கனமழை, புயல் மழை என்றுதான் இருக்கும். இதை எதிர்கொள்ள நம் தயாராக இல்லை என்றால் இப்படி புலம்பிக் கொண்டே தான் இருக்க வேண்டும் என கூறினார்.

சங்கி என்றால் நண்பன் என்று பொருள்படுகிறது. திராவிடன் என்றால் திருடன் என்று பொருள்படுகிறது. நீங்கள் தமிழ் மக்களை தமிழ் இனத்தை மறைத்து திராவிடன் திராவிடன் எனக் கூறுகிறீர்கள். எனது தந்தையை சங்கி என கூறுவது வருத்தம் அளிக்கிறது என ரஜினியின் மகள் கூறினார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் ஏற்கனவே ஆதரவாக பேசினேன். அனைத்து மாநில முதலமைச்சர்கள் மீதும் வருமானவரித்துறை சோதனை மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மீது மட்டும் ஏன் மேற்கொள்ளப்படவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.