தென்கொரியா மீதான வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்த எதிர்ப்பையும் மீறி வடகொரியா புத்தாண்டு தினத்திலும் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை சோதனைக்கு பின் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கிம் ஜாங் அன்  கலந்து கொண்டார்.

அதன் பின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அணு ஆயுத உற்பத்தியை வேகமாக வடகொரியா அதிகரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் பிற எதிரி நாடுகளின் ஆபத்தான போருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடகொரியாவின் நலனை பாதுகாக்கும் நோக்கத்திலும் நாட்டில் ராணுவ பலம் இரு மடங்காக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.