பஞ்சாபி நடிகர் சோந்த் சிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோந்த் சிங் கடந்த 6 நாட்களுக்கு முன்பே காணாமல் போய்விட்டார். இதனால் அவரது குடும்பத்தினர் சோந்த் சிங்கை தேடி வந்தனர். இந்த நிலையில் சுல்தான்பூர் லோதி- கபுர்தலா சாலையின் அருகே நிலையில் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோந்த் சிங்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சோந்த் சிங் “குரு நானக் நாம் ஜஹால் ஹை” என்ற சூப்பர் ஹிட் பஞ்சாபி திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.