சிரியாவில் உள்ள முக்கிய நகரங்களை துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் தலைநகர் டமாஸ்கஸூக்குள் நுழைந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்துள்ளனர். அதாவது பஷார்-அல்-ஆஷாத் தலைமையிலான அரசை கவிழ்க்கும் முயற்சியில் அவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். இந்நிலையில் நாட்டை விட்டு அதிபர் தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில் அவருடைய விமானமும் மாயமானதாக கூறப்படுகிறது. தலைநகரின் எல்லைப் பகுதியில் உள்ள பஷார் அல் ஆஷாத் தந்தை சிலையையும் கிளர்ச்சியாளர்கள் உடைத்து விட்டனர். இதனால் சிரியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதலே டெட்ரா பிராந்தியத்தில் அதிபருக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரை தொடங்கினர். கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தலைநகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி விட்டனர். மேலும் அதோடு அதிபரும் நாட்டை விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுவதால் அந்த நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.