திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரபலமான சுற்றுலா தளமாக இருக்கும் நிலையில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அங்கு அவ்வப்போது குரங்குகள் கூட்டத்தை காண முடியும்.

இந்நிலையில் ஒரு ஒரு குரங்கு தன்னுடைய குட்டி தூக்கி கொண்டே அலைகிறது. ஆனால் அந்த குட்டி இறந்துவிட்டது. இதனை அறியாத அந்த குரங்கு தன் குட்டியை தூக்கி கொண்டே செல்வது கலங்க வைக்கும் சம்பவமாக மாறி உள்ளது.

அதாவது பைன்மரக்காட்டில் அந்த குரங்கு அலைந்து திரிந்த நிலையில், திடீரென மரத்திலிருந்து கீழே விழுந்து அந்த குட்டி இறந்து விட்டது. ஆனால் தன்னுடைய குட்டி இறந்து விட்டதை அறியாத அந்த குரங்கு அதனை தூக்கிக் கொண்டே சுற்றி திரிகிறது. இதை அந்த பகுதி மக்களும் சுற்றுலா பயணிகளும் பரிதாபத்தோடு பார்த்து செல்லும் நிலையில் ஒரு தாய்க்கு தன்னுடைய குட்டி இறந்தது கூட தெரியாமல் இவ்வளவு அரவணைப்போடு வைத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த குரங்கு குட்டியின் உடல் அழுகி அதற்குரிய வாசனை வந்த பிறகுதான் குட்டியை தூக்கி வீசும் என்று சிலர் கூறுகிறார்கள்.